Sunday, 12 November 2017

20 ரூபாய் முதலீடு - ஐடியா - சொல்லி அடிப்போம்.

" டெல் மீ சம்திங் அபோட் யூ?" . " சோ யுவர் ரெஸ்யூம் ". இந்த வார்த்தைகளை கேக்காத இன்டர்விய்வோ (அ) இன்ஜீனியரோ இருக்க மாட்டாங்க. இதுக்கும் முதலீட்டுக்கும் என்ன சம்பந்தம்?..... இருக்கே ..... மச்சி உன் ரெஸ்யூம கொடேன், நான் பேர மட்டும் மாத்தக்கறேன்னு அவசர, அவசரம ஒரு ஃபிரெண்டு கிட்ட ரெஸ்யூம் வாங்கி ஏப்படியோ இன்டர்வியூ போய், அங்க இன்டர்வியூல.... யெஸ் டெல் மீ சம்திங் அபோட் .Net... அப்போ தான் அவனுக்கு தெரியும் நாம மெக்கானிக்கல் என்ஜின்யர் நம்ம ஃபிரெண்ட் சி எஸ் இ னு.

முதலீடும் இந்த மாதிரி தான். யாரோ பேசுறத கேட்டுட்டு 10 நிமிஷத்துல முடிவு எடுத்தா தப்பாதான் இருக்கும். ஆற அமர யோசிக்கனும். " சார் இந்த ஃபண்ட் உங்களுக்கு கூட் ஆகும், இந்த பாலிஸி தான் பெஸ்ட், இந்த சேர் ரிட்டர்ன் செம " அப்படீனு சொல்ற ஏஜெண்ட்டுக்கு அவங்க டார்கெட் தான் தெரியும் நம்ம டார்கெட் இல்ல.

கொஞ்சம் யோசிப்போம் .....
உங்க வலது காலை கடிகார எதிர் திசையிலும், உங்க இடது கையை கடிகார திசையிலும் சுற்றுங்க... இப்போ நீங்க இத செஞ்சு பாத்துகிட்டு இருந்தீங்கனா, தெரியும் அதோட கஷ்டம். நம்ம மூளை அதுக்கு தயாரா? இல்லையானு? தெரியனும்.

ரோஜர் ஸ்பெர்ரி என்ற நோபல் பரிசு பெற்ற பேராசிரியர்தான் முதல் முதலில் இட வல மூளை செயல்பாட்டை கண்டறிந்தார்.

இடது பக்க மூளை - தர்க்கம் , அலசி ஆராய்தல் ( நியூட்டன் போன்ற விஞ்ஞானிகள் - இருப்பவற்றிக்கான தொடர்புகளை ஆராய்ந்து புதிர்களை விடுவிப்பவர்கள் )

வலது பக்க மூளை - கற்பனை, பெரிதாக சிந்திப்பது, முடிந்ததில் இருந்து முடியாததை நோக்கி பயணிப்பது ( ஷேக்ஸ்பியர் போன்ற இலக்கிய வாதிகள் - பூமி சூரியனை சுற்றுவதாக கோபர் நிகஸ் சொன்னதை ஏற்க மறுத்தவர் ) .

ரெஸ்யூமிக்கு வருவோம். அதாவது நாம யார்? நம்மளோட ஸ்ரென் த் என்ன? நாம சொல்லுற விதம். நாம சொல்லுறது மந்தவங்களுக்கு ஒரு கியூரியஸ் ஏற்படுத்தனும். ஒரு பழைய ரெஸ்யூம பாப்போம். அது 15ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.1452 ஆம் வருடம் டாவின்ஸி, மிலனின் ரிஜண்ட் லவடோவிகோ ஸ்ஃபோர்ஸாவிற்கு எழுதியது. அதில் அவரது ஸ்கில்ஸ் (Skills).

1 ) நான் லேசான , கனமான பாலங்கள் கட்டும் திட்டங்கள் உண்டு.
2) ஒர் இடம் முற்றுக்கை இடப்பட்டால், எப்படி தண்ணீர் வரத்தை நிறுத்துவது.
3) கோட்டை , அது மலைமேல் கட்டப்பட்டிருந்தாலும் அதை அழிக்கும் முறை
4) எளிதாகவும், வசதியாகவும் எடுத்துச் செல்ல கூடிய பீரங்கிகள் செய்வது.
5) பெரிய பீரங்கிகளின் தாக்குதலை தாக்கு பிடிக்கும் கப்பல் செய்வது
6) ஓவியத்திலும், கட்டடக் கலையிலும் நம் அரசுக்கு நிகர் யாரும் இல்லை என நிருபிப்பது.

இது தான் ஸ்கில்ஸ் ஒரு கம்பெனிக்கு (அரசுக்கு) தான் எப்படி தேவைப்படுவேன் என்று சுருக்கமாக கூறுவது.

இதேதான் முதலீட்டுக்கும் தேவை. நம்ம கைலை காசு இருக்குன்னு எல்லாம் செய்ய கூடாது. எது தேவையோ அதை மட்டும் செய்ய வேண்டும். "அடிக்கடி எவனாவது  படை எடுத்துக்கிட்டே இருக்கான், கட்டுங்க சீனப் பெருஞ்சுவரை " என்று வரும் காலத்தை பற்றி யோசிக்காமல் தன் முழு கஜனா வையும் காலி செய்து - பெருஞ்சுவரில் காவலுக்கு நின்ற காவலாலிக்கு கூட கூலி கொடுக்க முடியாமல் திணறியது. பின் எதிரி சில வெகுமதிகள் கொடுத்து சுலபமாக உள்ளே நுழைந்தான்.

நம்மில் பலரும் இப்படி தான். தேவைக்கு முக்கியதுவம் கொடுக்காமல் ஆசைக்கு முக்கியதுவம் கொடுத்து வருங்காலத்தை மறந்து விடுகிறோம். ஒரு சிலரோ வருங்காலத்தை மட்டும் பார்த்து நிகழ்காலத்தையும் மறைத்து விடுகின்றார்.

ஆப்பிள்

சொன்ன உடனே ஆப்பிள் ( பழமோ , போனோ) நம்ம மனகண்ணில் தெரிகிறது. அத தாண்டி நியூட்டன் , புவி ஈர்ப்பு விசை ஞாபகத்துக்கு வந்த நீங்க அடுத்த லெவல் .

சொத்து - நம்ம நினைவுக்கு வருவது வீடு, நிலம் ஆனா அத தாண்டி ஒரு சொத்து அது தான் நிதிச் சொத்து . இந்த வகையிலும் நாம யோசிக்க வேண்டும். நம்முடைய சிந்தனையில் மாற்றம் வர வேண்டும்.

மனிதன் 3 வகையில் வேலையை செய்கிறான்.

1 ) வேலை எப்போது முடியும் என்று கடிகாரத்தையும், சம்பளம் எப்போது கிடைக்கும் என நாட்காட்டியை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ( இவர்கள் எப்போதும் ஒரு வட்டத்துக் குள்ளேயே இருப்பவர்கள் நிதி சொத்தை உருவாக்க முடியாமல் தவிப்பவர்கள் )

2) உயர்ந்த நோக்கம் இருப்பவர்கள் உரசினால். எரிய தயாராக,எந்த நேரமும் அலர்ட்டாக இருப்பவர்கள் ( சமயத்திற்காக காத்திருப்பவர்கள் கிடைத்ததும் சிறிது காலத்தியே வேலை வந்து விடுவார்ள்)

3) பசியை ஒதுக்கி, தூக்கத்தை துண்டித்து முதல் தாக்குதலை சந்தித்து மனிதர்களை வழி நடத்தும் மேன்மையானவர்கள் (அனைத்து அகச் சிறந்த பிரபலங்கள் ) .

சைரஸ் உடைய சிந்தனை நிதிச் சொத்தை உருவாக்க ஒரு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு.
" எந்தக் கட்டத்திலும் நம்பிக்கை இழக்கக் கூடாது. வாய்ப்பு வருகிற வரை அமைதி காத்து திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெருந்தன்மையான குணங்களை உடை தீர்மானிப்பது இல்லை, நடத்தையே தீர்மானிக்கிறது".

அப்பா,, ஞாயிற்றுக் கிழமை நல்லா தூங்கலாம். எப்போ லீவு கிடைக்கும்? என ஏக்கத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வைப் பற்றி எப்போதும் ஒரு தவறான கண்ணோட்டமே உண்டு.

ஒய்வு என்பது
"ஒன்றும் செய்யாமலிருப்பதல்ல; ஒன்றிலிருந்து இன்னொரு செய்கைக்குச் சென்று மூளையின் பயன் படாத பக்கங்கவும் புழக்கத்திற்கு கொண்டு வருவது. பணியை நேசிக்கிறவர்கள் எவ்வளவு நேரம் உழைத்தாலும் களைப்படைந்து காலவதி ஆவதில்லை. விரல்களையே நாராக மாற்றுபவர்கள் கைகளில் எப்போதும் மலர்கள் - மாலையாகின்றன. கைகளை தூரிகைகளாக மாற்றுகிறவர்கள் தொட்டால் துணிகள் ஒவியங்களாகின்றன. சிலருக்கு வாய் கொப்பளித்தால் வாலிபம் வந்து விடும். முகம் கழுவினால் போதும் முதுமை போய்விடும்.". சிலர் யங் கஸ்ட் ஓல்டு மேனாகவும், சிலர் ஓல்டஸ்ட் யங் மேனாகவும் இருக்கின்றனர்.

கி மு 14 79 ஆம் துட்மோஸ் ( எகிப்திய நெப்போலியன்) எப்போதும் கேளிக்கைகளிலிலும், உல்லாசங்களிலும் நேரம் களிக்கவில்லை மாற்றாக, அவன் முன் இருந்த சவால்கள் அவனை தூங்கவிடாமல் செய்தன. அது அவனை ஒரு முறை கூட தோல்வியை தழுவ செய்தது இல்லை. அவனது நிதானமான நடவடிக்கை, அழுத்தமான நுகர்வு - அவனை 20 ஆண்டுகளில் 17 படை டுயடுப்புகள் , எகிப்தை ஒரு சூப்பர் பவராக மாற்றியது.

சிந்தனையே மாற்றத்துக்கு வழி வகுக்கும். எவ்வாறு சிந்திக்கதிறோம் என்பதே நம்மை தீர்மானிக்கும்.
சற்று சிந்திப்போம்.

An example of a bird is????

ரொம்ப ஈஸியான கேள்வி. அப்போ இதுக்கு பதில் சொல்லுக்க ...

A bird is an example of__________________

சிந்திப்போம் .....

Sunday, 1 October 2017

பத்து தலை இராவணன் - பிம்பம்



அந்த யுத்த களத்தில, கிட்டத்தட்ட இறக்கும் தறுவாயில் அந்த உயிர் அவன் அனைத்தையும் கற்றுனந்தவனாய் அதிக வல்லமை படைத்தவனனாய், ஆனால் செய்த தவறுக்கான தண்டனையாய் தன் கடைசி மூச்சில் பத்து தலை இருந்தும், ஒரு தலையின் மூளை கூட சிந்திக்காமையின் காரணமாய், அந்த களம் பல உயிர்களை ஏற்கனவே பழி வாங்கியிறுந்தது.

" இலட்சுமனா.. நீ சென்று இராவணனிடம் உலகை பற்றி தெரிந்து கொள். பிரம்மனை தவிர வேறு யாரும் அவன் அளவு தெரிந்திருக்க வாய்ப்பில்லை" - இராமன்.
இலட்சுமனன் இரத்த வெள்ளத்தில் கிடந்த இராவணனின் தலையருகே சென்று " நான் உன்னிடம் உலகை பற்றி கற்றுக் கொள்ள வந்தேன்" என கூறி சில நிமிடம் நின்றார். பதில் இல்லை. இராமனிடம் வந்து நடந்ததை கூற.

" எந்த ஒரு மாணவனும் ஆசிரியர் தலை அருகே அமர்ந்து கற்றுக் கொள்ள மாட்டான் அவன் கால் அருகே சென்று அமர்ந்து கேள்"
இராமன் சொன்னபடியே செய்தான், அப்போது இராவணன்  சொன்ன 3 விஷயங்கள்.

அதை இந்த காலத்தோடு ஒப்பிட்டு பார்ப்போம்.

1 ) எந்த ஒரு முக்கியமான (அ) முக்கியத்துவம் வாய்ந்த செயலையும் தள்ளி போடாதே முடிந்த அளவு விரைந்து முடி.

பிரச்சனை என்னன்னா, எது முக்கியம் எது முக்கியமில்லை கிறதே நம்மள்ள பல பேருக்கு தெரியாது.

முதல் முதல்ல பிள்ளைய விஜயதசமில்ல ஏன் ஸ்கூல் சேத்தனும்?

பாக்கெட் ல 100 ரூ தான் இருக்கு, செம ஹோட்டல் பிரியாணி வாசம் முக்க தொலைக்குது அது 100 ரூ,  100 ரூ தவிர வேற காசு கையில இல்ல, சம்பளத்துக்கு 2 நாள் இருக்கு. இப்போ பிரியாணி சாப்டே ஆகனும், பிரியாணியா ? இல்ல 2 நாளா?

டெய்லி 20 ரூ மாசம் 600 ரூ, SIP 25 வருஷம் 15% கூட்டு வட்டி 17.42 L? இல்ல 20 ரூபாய் ஏதோ ஒரு தண்ட செலவு? 

எல்லோரோட ஃலைப் லையும் இப்படி தான் , இது முக்கியம் இது முக்கியமில்ல என பிரிக்க தெரியாம ஓடி இருக்கும், அல்லது ஒடி கிட்டு இருக்கலாம்.

ஒவ்வொரு ரெண்டு வருஷத்துக்கும் நம்ம முக்கியதுவம் மாறிகிட்டே இருக்கும். அத கண்டுபிடிக்க ஐன்ஸ்டீன் அளவு மூளை வேணாம். குறைந்தது நம்ம 10% மொத்தமா வேல செய்யுற மூளையை கொஞ்சம் வேல செய்ய வைப்போம். எப்போவும் நம்ம கண்ணும், காதும் நம்ம முக்கியத்துவத்துக்காக திறந்தே இருக்க வேண்டும்.

2) உன்னுடைய எதிரியை எப்போதும் குறைத்து மதிப்பிடாதே.

புராண காலத்துல வேனும்னா எதிரி வேற ஒருவனா இருக்கலாம். ஆனா இப்போ நமக்கு நாமே எதிரி தான்.

சத்தம் போட்டு ஒரு பொய்யை சொல்லும் போது உண்மை தூங்கும் னு நினைக்கறது,

ஒரு வேலையை செய்யும் போது வேண்டா வெறுப்பா செய்யுறது.

காட்டுகத்து கத்துற மேலாளர் நாமளும் அங்கிருந்து தான் வந்தோம்னு நினைக்காதது. இவன் என்னா சொல்லுறது , நாம என்ன கேக்குறது னு நெனைக் குற வேலையாள் தானும் ஒரு நாள் அந்த இடத்துக்கு போவோம்னு நெனைக் காதது.

14 மணி நேரம் வேலை செய்தும் 2 மணி நேரத்துக்கான முழு வேலையை செய்யாதது. வேலை செய்யுற இடத்துல முழு மனசோட வேலை செய்யாம இருக்குறது.

செம , அவன ஏமாத்திட்டோம்னு சந்தோச படும் போது நம்மள நாமே ஏமாத்தி கிட்டு இருக்கோம்னு தெரியாதது.
பிரச்சணை போட வேர் தெரியாம அத மேலோட்டமா தீக்குறது.

வீட்டுல இருக்குற பிரச்சன என்னனு தெரியாம சீரியல், ரியாலிட்டி சோ போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் நாட்டம் செல்வது. 

" உங்க வீட்டுல இருக்குற பால கொண்டு வந்து இந்த பெரிய அண்டாவுல தனித் தனியா ஒருத்தர் ஊத்துறது மத்தவங்களுக்கு தெரியாம ஊத்துங்க, நான் அந்த பால வச்சு வருஷம் முழுவதும் உங்க வீட்டுல பால் பிரச்சனை இல்லாம பன்னுறேன் னு ஒரு முனிவர் ஒரு கிராமத்துல சொல்லுறார். ஊர்ல இருக்குற எல்லாரும் ஒங்வொருத்தரா கொண்டு வந்த ஊத்துறாங்க, " இப்போ, இந்த பாத்திரத்துல அந்த அண்டால இருக்குற பால கொண்டு வரேன் னு, மந்தரத்த முனு முனுத்தார், ஆனா பால் வரல, என்னடானு பாத்தா, அந்த அண்டா முழுவதும் தண்ணி. அவன் பால் ஊத்துவான், இவன் ஊத்துவான் , நான் ஏன் ஊத்தனும், என்று சொல்லி ஒவ்வொருவரும் தண்ணி ஊத்த, அண்டா மொத்தமும் தண்ணி ".

இப்போ ஒவ்வொருத்தரும் தனக்கு, தான், தான் எதிரினு தெரியாம, என்ன செய்யுறோம்னு தெரியாம, " தான் " என்ற ஒரு பெரிய எதிரியை வளக்குறோம். கண்ணுக்கு தெரியுற எதிரியை கூட ஜெயிச்சுரலாம், ஆன இந்த எதிரி நமக்கு மட்டும் இல்லை -  " நான் ஒருத்தன் வேல செய்யாதால் இந்த கப்பெனி முடங்கியா போயிற போவுது?" உண்மை என்னன்னா "இல்லை". இப்படி பல பேர் நினைத்தால் ????

3) ஒரு போதும் உன்னுடைய இரகசியத்தை வெளிபடுத்தாதே.

" இரகசியம் உன்னிடம் உள்ளவரை அது உனக்கு அடிமை, இல்லையேல் அதற்கு நீ அடிமை" .

 சிறந்த எடுத்து காட்டு சோசியல் மீடியாவில் தன்னை பறைசாற்றுவதற்காக தன்னை பற்றி இடப்படும் ஸ்டேடஸ்கள். ஒரு ஆணிற்க்கு அது ஒரு பெரிய விஷயமாக தெரியாது, அனைவரும் அதை நிராகரித்து விடுவார்கள் ஆனால் பெண்களுக்கு ???? தினமும் ஏதாவது ஒரு வகையில் சோசியல் மீடியா விடம் பெண்கள் , ஆண்கள் என ஏதாவது ஒரு வலையில் விழுந்து விடுகின்றனர். அது பிறகு மூங்கில் காட்டில் பரவும் தீ போல பரவி விடுகிறது. முக்கால் வாசி புதியதாக சோசியல் மீடியா உள் வருபவர்களுக்கே இந்த நிலமை . 

"நான் ரொம்ப டிப்ரஸ்ஸா இருக்கேன்னு, ஐ வான்ட் டூ டாக்' டூ சம் ஒன் ரீ கார்ஸ்" னு பேஸ்புக்லயோ, வாட்ஸ் அப் லயோ ஸ்டேடஸ் போடுற பசங்கள விட பொண்ணுங்களுக்கு வறுகிற " கமெண்ட் " ஆறுதல்கள்  அதிகம்.  இத சொல்லியிறுக்க வேண்டாமோ என்கிற அளவுக்கு கமெண்ட்டுகள்.

வன்மம், வன்முறையை விதைத்து விட்டு நான் அதற்கு பொறுப்பள்ள என ஜகா வாங்கும் சினிமாக்கன். அதற்கு மேலான சீரியல்கள், இவ்வளவு தான் என்று சொல்ல முடியாத அளவுக்கு மோசமான ரியாலிட்டி சோக்கள், என்று எல்லாமே நம்முள் விதைத்த மாய பிம்பங்கள் .
இவைகள், மிக பிரம்மாண்டமாய் உருவெடுத்த ஒரு மாய வலை -  பேசுகிற எல்லோரும் நல்லவர்களாய் தெரிகிற சோசில் மீடியா - ஆசுவாசபடுவதற்குள் அரங்கேறும் அசிங்கங்கள் - தொடரும் பிளாக் மெய்கள்- உருளும் தலைகள் - என்னற்ற கற்பனைகள்- அந்தரங்கத்தை சேர் மற்றும் டேக் செய்கின்ற துரோகங்கள், எல்லாம் இன்று வெறும் கையடக்கத்தில் .

நாகரீகம் என்ற பெயரில் அநாகரீகமாய் திரியும் அவலங்களாய் காலம் உருண்டோடிக் கொண்டே இருக்கும்.
கதாநாயகனாய் இருக்கும் நம் இரகசியம் - வெளிபடுமாயின் நாமும் கோமாரிகள் தான். நாம் அழ மற்றொருவர் சிரிக்கும் அந்த காலம் வெகு தூரம் இல்லை. - இரகசியத்தை இழந்தோமானால்.

இராவணனுக்கோ பத்து தலை தான். ஆனால் இங்கு நம்முடைய தலை ஏதோ ஒன்று தான், ஆனால் முகமூடிகள் ஆயிரமா? லட்சமா? தெரியாது.

கயிறை பார்த்து பாம்பு என அலறுவதும்,
" இருட்டுல ஏன் பயப்படுற?" - " பேய் ஏதாவது இருந்தா,?" - "ஏன் இருட்டுனா பேய் மட்டும் தான் வருமா? கடவுள் வராதானு" - கேக்குற அறிவுடமை வரும் வரை இருட்டுல பயந்து கிட்டே தான் இருக்கனும்.

நீ பார்க்கும் கண்ணாடி கூட மாய பின்பம் தான், ஏனெனில் இடவல மற்றம் உண்டு. அதையும் உண்மை, அத்தனையும் உண்மை என என்னும் நம் மனம் – நம்முள்ளான "நான் " என்னும் "என்னை " அறியாத வரை  புராண இராவணனை ஒவ்வொரு விஜய தசமியிலும் வித விதமாக கொல்லலாம். ஆனால் நம் முள் பல முகமூடிகள் கொண்ட இராவணனை????

Saturday, 9 September 2017

கொஞ்சம் யோசிச்சுதான் பாப்போமே




அந்த வகுப்பில் மொத்தம் 50 மாணவர்கள், பேராசிரியர் அனைவரிடமும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பேரை எழுத செய்தார், பின் அந்த பலூன்களை ஒரு ரூமில் போட்டார். மாணவர்களிடம் 10 நிமிடத்தில் தத்தம் பேர் எழுதிய பலூன்களை எடுக்க சொன்னார் ஒட்டு மொத்தமாக வகுப்பு கிளம்பியது தேடியது ஒரு சிலரால் மட்டும் எடுக்க முடிந்தது மற்றவர்கள் வெறும் கையுடன் திரும்பினர். 



இப்போ அந்த பேராசிரியர் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசிக்க செய்தார் அது ஒன்னும் "அவுட் ஆஃப் பாக்ஸ் " யோசனை அல்ல அது இருக்கும் போசனையில் சிறப்பான யோசனையை தேர்ந்தெடுப்பது, அதாவது எல்லோரும் போய் ஏதாவது ஒரு பலூனை எடுங்கள் பின் அதில் எழுதியுள்ள பேர் யார்னு பாத்து அவரிடம் கொடுங்கள் பல என் எடுக்க 1 நிமிஷம் கொடுக்க 2 நிமிஷம் மொத்தம் 7 நிமிஷம் மிச்சம்.



இந்த ஸ்மார்ட்னஸ் தான் நாம வாழ்கையில் சேமிக்க மிஸ் பன்னுற ஒரு விஷயம் அதாவது நம்ம கையில பணம் இருக்கும் போது உடனே செலவு செய்யுறது அப்புறமா சேமிக்கறது, தலைகீழ் சேமித்தது போக தான் செலவு. 

ஒரு பெரிய ஹால் ஒரு 1000 பேர் கேட்க, அந்த ஒருகிணைப்பாளர் பேசுகிறார் " வாழ்க்கை நிலை இல்லாதது அதனால இன்றைய வாழ்க்கையை வாழ்ந்துகோங்க, நாளைக்கு ன்னு எதுவும் இல்ல, இன்னைக்கு நல்லா எஞ்சாய் பண்ணுங்க". அதற்கு நல்ல கைத்தட்டல். வெளியே வந்த ஒருவரிடம் என்ன புரிந்தது னு கேட்டதற்கு என்னப்பா இப்போ என்ன இருக்கோ அத இப்போ வே எஞ்சாய் பணனும். " புரியல னா? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க, " அதாவது இன்னைக்கு ஏன் கையில் ஒரு 100 ரூ இருக்கு அத இன்னைக் கே செலவு செய்யனும் ஏன்னா நாளைக்கு னு ஒன்னு இல்ல". 



கொஞ்சம் யோசிப்போம்....
எப்பவுமே நாம ஒரு விஷயத்தை எப்படியுமே நம்மளோட பணத்த வைச்சு தான் முடிவு எடுப்போம். அது ஒரு எடுத்துக் காட்டா இருந்தாலும் சரி. 

நாளைக்குன்னு எதுவும்  இல்ல அப்படின்னு சொன்ன நிகழ்ச்சி ஒருகிணைப்பாளர் ஒன்னும் சும்மா அத சொல்லுல " சார் அதான் சொன்னீங்களே, உங்களுக்கு பேமெண்ட் வேணும்?" கேட்டா " இல்லப்பா வேணாம்" னா சொல்ல போறார். அவர் சொன்ன விஷயம் வேற நாம புரிந்து கொண்டது வேற.



நிறைய விஷயங்கள் இப்படி தவறான புரிதலோடு தொடங்குகின்றன, முடிகின்றன " நமக்கு தெரிஞ்ச ஒரு   பைனான்ஸ் இருக்கு இன்னைக்கு நூறு அடுத்த மாசம் 200 " . இங்க நாம யோசிக்க மறந்த விஷயம் " எப்படி ". நார்மல இந்த மாதிரி விஷமங்கள் எப்படி பரவும்னா 

அந்த கம்பெனி ஃபர்ஸ்ட் ஒரு 10 பேர செலக்ட் செஞ்சு இந்த மாதிரியான விஷங்களை மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பரவ விடுவார்கள் அதாவது ரெண்டு பேர் ஒரு சம்பெனி ய பத்தி ஆஹா ஓஹோனு பேசுவாங்க பக்கத்துல இருக்க வன் பர்ஸ்ட் நாள் காது கொடுத்து கேப்பான். அடுத்த நாள் வேற ரெண்டு பேர் அதே இடத்துல பேசுவான் இப்போ முன்னாடி நாள் காது கொடுத்து கேட்டவன் இப்போ நேராவே கேட்பான். இந்த மாதிரி ஒரு சங்கிலி தொடர் மாதிரியே போகும் இவங்க டார்கெட் எல்லாம் நடுதர மற்றும் ஏழை மக்களே. 

இப்படி வேறு நபர்களிடன் ஏமாறுவது மட்டும் இல்லாம நம்மள நாமளே ஏமாந்திகிறோம். அது எப்படினா ?

நம்மளோட ஹல்த் செக்கப் மாதிரியே வெல்த் செக் கப்பும் முக்கியம் தான் . கொஞ்சம் யோசிப்போம.....

First best than next , than rest இது தாள் பினான்சியல் சொத்து உருவாக்க முடியும். அதாவது சிறந்த நீண்ட கால முதலீடு (இன்சுரன்ஸ், நீண்ட கால மியூச்சுவல் பண்ட், .ஹல்த் இன்சுரன்ஸ் ) அடுத்து next ( குறுகிய கால மியூச்சுவல் பண்ட், டெபாசிட், பங்குகள், இதர முதலீடுகள்) அடுத்து Rest ( ஆடம்பர பொருள்கள், இ எம் ஐ கள் ). ஆன இப்போ எல்லாம் தலைகீழ் நிலையான சொத்தை உருவாக்க வரும் கால பினான்சியல் சொத்தை இழக்கும் அபாயம் தற்போது சேர்ந்து உள்ளது. 

லைப் இன்சுரன்ஸ் - "சார் நா இருக்கும் போது எனக்கு இல்லாத பணம், நா செத்ததுக்கு அப்புறம் எதுக்கு ?" .. ஒரு விஷயம் எப்பவுமே நமக்கு 100% தெரியும்னு நெனைக்கிற விஷயம் நமக்கு முழு சா 1% தான் தெரியும். இங்கையும் அதே தப்ப தான் செய்யுறோம். 

சில கேள்வி கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க......
1) எதுக்கு நாம சொத்து சேக்குறோம்?
2) எதுக்கு பணம் சேக்குறோம்? 
3) எதுக்கு நல்ல பேர் வாங்கனும்?

இதெல்லாம் யாருக்கு ? 

பேமிலி, நம்மள நம்பி இருக்கவங்களுக்கு சரியா? அப்போ லைப் இன்சுரன்ஸ்,? அதுவும் அவங்களுக்கு தான.....



அடுத்து, ஒருத்தர் தொழில்ல ரொம்ப இழப்பு ஏறக்குறைய எல்லா வழிகளையும் செய்து விட்டார். அவர மாதிரே அதே தொழில் ல தோல்வி அடைந்து அவரும் எல்லா வழிகளையும் செய்து விட்டார். ரெண்டு பேரும் ஒரு நாள் ஏதேச்சையாக சந்தித்துக் கொண்டனர். ஒருத்தர் சொன்னார் " ஏன் நீங்க சொஞ்சம் கடன் வாங்கி இன்னொரு தடவ முயற்சி பண்ண கூடாது?" அட ஆம இதுவும் சரியான யோசனை தான். இது தான் பெரிய தப்பு. ரெண்டு பேரும் தோத்தவங்க, எப்படி ஒரு தோத்தவர் இன்னொருத்தருக்கு சக்ஸஸ் ஆக ஐடியா கொடுக்க முடியும். 


யோசிச்சு பாருங்க 1000 விஷயம் எனக்கு தெரிஞ்சா என்னால 100 விஷயம் தான் தெளிவா விளக்க முடியும். தெரியாதே 100 விஷயம் தானா?.... 

எஞ்சாய் பண்ணறதுனா செலவு செய்யறது மட்டும் இல்ல வருங்கால தேவைக்கான சேமிப்பு மற்றும் பேமிலி க்கான பாதுகாப்பும் தான் அப்படின்னு யோசிச்சு பாத்த தெரியும். 

அந்த பேராசிரியர் சொன்ன மாதிரி தான் கடன் காரர்கள் கிட்ட ஐடியா கேட்டா கடன் வாங்க தான் ஐடியா கிடைக்கும். தேர்ந்தெடுக்கும் முறையில் மாற்றம் வேண்டும், நெறைய இருக்கு நாம தான் செலக்ட் செய்யனும். 

பெஸ்ட்டா? ரெஸ்டா ? யோசிங்க வளர்வோம்.

Sunday, 9 July 2017

20 ரூபாய் இன்வெல்ட்மெண்ட் - 4, தாறுமாறு தங்கம் - புதுசா ஏதாவது செய்வோம்.



கைரேகையும் , சாமுத்திரகா லட்சனமும் முக்கியதுவம் பெற்றுந்த காலம் அது. ஒரு மாணவன் கல்வி கற்க குருகுலம் வந்தான். குரு அவனை அவனை ஏற இறங்க பார்த்து விட்டு, அவன் கை ரேகையை பார்த்தார். " உனக்கு கல்வி ரேகை இல்லை, உனக்கு இங்கு இடமில்லை" என்றார். உடனே அவன் " கல்வி ரேகை எப்படி இருக்கும் " என்றான். குரு விளக்கினார். அவன் பரபரவென அருகில் இருந்த மரப்பட்டையை உறித்து, அவர் சொன்னது போல் தன் கையை கிழித்துக் கொண்டான். " இப்போது நீங்கள் சொன்ன, அந்த ரேகை வந்துவிட்டது குருவே " என்றான். அவன் வேறு யாரும் இல்லை மெளரிய சாம்ராஜ்ஜியம் உருவாக காரணமாக இருந்த சாணக்கியர்.


இந்த கதைக்கும் தங்கத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. இருக்கு நாம கொஞ்சம் பின்னாடி போவோம், " இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் " - இது ஓடாத ஒரு நியூஸ் சேனலே இருக்காது அப்போது பெரும்பாலான வீடுகளில் இத பார்த்து தான் டெஷசன் மேக்கிங்கே. நம் கிட்ட என்னதான் சொத்து இருந்தாலும், தங்கம் இருந்தே ஆகனும். ஏன்? நம்ம சொத்து புதுசா போற இடத்துல தெரியாது. ஆனா தங்கம் நம்ம சொந்த பட்டியல் போட்டு கட்டும். கல்யானத்துக்கு போன கூட பொண்ணு எப்படிங்கிறத பார்குறத விட நகையை பாக்குறவங்க அதிகம், இதே கதைதான் கோயிலையும். சில பேர் மத்தவங்க நகையை விட்டு, நகையையே கம்பேர் பன்ன ஆரம்பிச்சுட்டாங்க. எது எப்படியோ தங்கமும் ஒரு முதலீடாக உள்ளது.


இப்ப கொஞ்சம் டெக்னிகலா போவோம். தங்கம் ஏன் எப்போதும் பொருளாதாரத்தின் முக்கியதுவம் பெறுகிறது. தங்கத்த பொருத்த வரைக்கும் அதோட சப்ளை எப்போதும் கம்மி. அதாவது 60 மடங்கு தேவை உள்ளது. அதுனால அது எப்போவுமே வெல அதிகமா இருக்கு. தங்கம் எப்போதும் டாலர் பொருத்து விலை மாறும். சிம்பிள சொல்லனும்னா டாலர் வேல்யூ அதிகமானால், தங்கம் விலை குறையும். வேற சில காரணமும் உண்டு.
1) பெட் (Fed) ரேட் அதிகப்படுத்துதல் - டாலர் வேல்யூ அதிகமாகும்.
2) USA ன் பொருளாதார வளர்ச்சி டாலருக்கு சாதகமாக உள்ள போது
3) டாலருக்கான டிமாண்ட் உலக அளவில் அதிகமாக இருககும் போது.


அது எப்படி நாங்க பிசிகலா கோல்டு வாங்குறோம். அதுக்கும் டாலருக்கும் என்ன சம்பந்தம்? சில பேர் மட்டும் தான் கோல் டை மெட்டீரியல வாங்குறோம், பெரு நிறுவனங்கள், நாடுகள் அதை டீ மெட்டீரியல தான் வாங்கு வாங்க. "ஹட்ஜிங் ".



ஹட்ஜிங் - அதிகம் கேள்விபடாத வார்த்தை, பங்கு சந்தை ( Share Market) அங்கு சாதரணமாக சேர் வாங்கலாம், ஒரு, இரண்டு, மூன்று மாத காண்ட்ராக்ட் மூலமாகவும் வாங்கலம் அல்லது பிரிமியம் செலுத்தி காண்ட்ராக் டை லாட்மூலமாக வாங்கலாம். நிறைய கம்பெனிகளின், பேலன்ஸ் ஹீட்டுகளில் இதர வருமானம் அதிகமாக அதாவது செயல்பாட்டு வருமானத்தை விட அதிகமாக இருக்கும். அப்படியென்றால் அது கண்டிப்பாக ஹட்ஜிங் செய்திருக்கும்.

அதாவது ஒரு குறிப்பிட்ட பிரீமியம் செலுத்து ஒரு விலைக்கு பங்கு கான்ட்ராக்டை வாங்கி பின் சேரில் முதலீடு செய்து அதன் விலையை உயர்த்துவது அதில் இருந்து லாபம் பார்ப்பது. புரியலயா? இன்னும் சிம்பிளா போவோம்.

இப்போ நான் டாலர் விலையேறும் அப்படினு நினைச்சு டாலர் காண்டர்ராக்ட் வாங்குறேன். ஆனா விலை சரியா போகல, நான் முன்னாடியே சொன்ன மாறி, டாலர் வேல்யூ குறையும் போது கோல்டு வேல்யூ ஏறும். உடனே அத வித்துட்டு லாஸ் புக் செய்து, கோல் டில் முதலீடு செய்து லாபம் பார்ப்பது. இதையே பெரிய அளவுல செய்யும்போது தங்கம் விலை தாறுமாற ஏறும். டாலர் வேல்யூ குறையும். இத பெரு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பலர் உலகம் முழுவதும் செய்யும் போது தங்கம் விலை நிர்ணயிக்கப்படும். லைட்டா புரிஞ்சுதா? இன்னும் சிம்பிளா

நம்ம வீட்டுல என்ன பண்ணுவோம், பத்து லட்சம் ரூபாய் எப்படி பாதுகாப்பா முதலீடு செய்வோம், ( 20 % ரிட்டர்னு சொல்ற ஃபைனாஸ் கம்பெனி மட்டும் ஏமாந்தும் முதலீடு செய்ய தீங்க) FD ஒரு 5 லட்சம் கோல்டு ஒரு 5 லட்சம் சாமர்த்தியமான முதலீடு, FD எப்படியும் கட்டாயம் கிடைக்கும். கோல்டு விலை ஏறினா லாபம் இல்லைனாலும் FD வட்டியை வச்சு மேகப் பண்ணலாம், ரைட்டா?? இப்போ இன்னும் சிம்பிளா போவோம்.

மளிகை கடை எதுக்கு அத்தனை பொருள வைச்சுருக்கனும், ஒன்னுல லாபம் கம்மி ஆனாலும் மத்தது காப்பாத்தும் - அவ்வளவு தான் ஹட்ஜிங் இப்ப நீங்க இங்க இருந்து மேல வரைக்கும் படிச்சா புரியும்.


இங்க தான் நாம சாணக்கியதனமா யோசிக்கனும் நம்மளோட முதலீடு கூட்டு வட்டி முறையில் பெருகனும் அப்போ மட்டும் தான் நீங்க கனரக்ட்டா முதலீடு செய்ததா அர்த்தம் நம்மளோட நாட்டு பணவீக்கம் அதுவும் கூட்டு வட்டி போல தான் நீங்க அத 7% வச்சு உங்க முதலீடு குறைந்தது 8% ரிட்டர்ன் குடுக்குற மாதிரி பாந்துக்குங்க. நம்ம தேர்வு 60% FD, 20% கோல்டு, 20 % பண்ட்டுகளில் இருக்கும் படி பார்த்து கொள்ளலாம். இது அவர் அவர் ரிஸ்கை பொருத்து மாறலாம்.


ஏன் கோல்டுக்கு கம்பியான முக்கியதுவம் கடந்த 6 வருடமா கோல்டோட ரிட்டர்ன் நெகட்டிவ் கீழே நான் வருஷம் அப்போ கோல்டோட விலை அந்த விலையோட இப்போதய பண மதிப்பு இப்போதைய கோல்ட் வேல்யூ லாபம் மற்றும் நஷ்டம் போட்டுறுக்கேன் பாருங்க. அப்புறம் முடிவு பண்ணுங்க


சாணக்கிய தனமான யோசனைக்கு தான் இங்க பஞ்சமே 2012 கோல்டு ரேட் எக்கு தப்பா ஏறியது அப்போ சில பேர் பயந்து கோல்டு எக்கச்சக்கமா வாங்கு நாங்க ஆன பொருளாதாரம் புரிஞ்ச சில பேர் வேற பக்கம் அதாவது பெஸ்டான ஷேர், மிசச்சுவல் பண்ட் பக்கம் கவனத்த திறுப்புனங்க. இவங்கதான் "காண்டரா இன்வெஸ்டர்" கண் கொத்தி பாம்பு மாதிரி சமயம் பாத்துகிட்டு இருப்பாங்க, சமயத்துல சமயோசிதமா யோசிச்சு முடிவு எடுப்பாங்க.

முதலீட்ட பொறுத்த வரைக்கும், பண வீக்கத்தை விஞ்சிய வளர்ச்சி, கூட்டு வட்டி முறையான வளர்ச்சி, சரியான தேர்வு அத்துடன் நாட்டின் பொருளாதாரம் முக்கியம். அதை விட முக்கியம் சாணக்கியதனம். இப்போவாவது நம்ம பொருளாதாரத்த பத்தி தெரிஞ்சுக்குவோம், அறிவுக்காக அல்ல ஆக்கத்திற்காக .

நகரா (movable) நகரும் (immovable) சொத்து களுடன் நிதி சொத்து ( financial Asset) யும் உருவாக்குவோம்.

முதலீடு - பெருக்குவோம்.


Sunday, 2 July 2017

20 ரூபாய் இன்வெஸ்ட்மெமென்ட் - 3, EMI என்னும் வில்லன் - புதுசா ஏதாவது செய்வோம்.


EMI என்னும் வில்லன்.

அது ஒரு குருகுலம், அங்க நிறைய பேர் வில்வத்தை கத்துகிட்டு இருந்தாங்க. ஒருத்தன் மட்டும் தினமும் சீக்கிரமா வந்து ஏதோ பண்ணிகிட்டு இருந்தான். மறுநாள் வில்வித்தை போட்டி ஆரம்பம். குரு " சீடர்களே அதோ தெரிகிறதே மரம் அதுல போய் ஒரு வட்டம் போட்டுட்டு வாங்க, அந்த வட்டத்துல அம்பு விட வேண்டும்" என்றார். உடனே எல்லாரும் போட் ஒரு வட்டம் போட்டு, வந்து அம்பு விட்டனர். நிறைய பேர் அம்பு விலகி சென்றது, ஒருத்தன் மட்டும் கரைக்டா விட்டான். " டேய் இதுக்குதான் டெய்சியும் சீக்கிரமா வரீயா " னு ஃபிரண்ட்ஸ் கேட்க. அதுக்கு அவன் " டேய் இப்போ நீ ஒரு வட்டம் அந்த மரத்துல போடு, அதுல என்னால கரைக்ட்டா அம்பு விட முடியாது, ஏன்னா நான் டெய்லியும் வந்து அம்பு விட்டு பாப்பேன் அது கரெக்ட்டா ஒரே இடத்துல தான் குத்தியது, நான் அந்த இடத்துல வட்டம் போட்டேன், நீங்கள் அவசர அவசரமா பொறுமை இல்லாம ஏதோ ஒரு இடத்துல வட்டம் போட்டீங்க, உங்களளோட ஸ்டென்த் உங்களால கண்டு பிடிக்க முடியல, நான் அத கண்டு பிடிச்சு, அதுக்கு தகுந்த மாதிரி இலக்கு நிர்ணயச்சேன்".



இங்க பல பேர் வோட எண்ணங்கள் இப்படி தான் இருக்கு.
" நான் சாகரதுக்குள்ள பெரிய பணக்காரன் ஆகனும், என்னோட சொத்து பல மடங்கு உயரனும், நான் எப்படியாவது அத செய்யனும், இத செய்யனும், அந்த இடத்துக்கு ( Level) போகனும், அந்த வேலைக்கு போகனும், அவன மாதிரி இருக்கனும்"


சரி, அதுக்கு ஃபர்ஸ்ட் நம்ம ஸ்டெர்ன்த் என்னன்னு தெரிய வேணாமா?. எனக்கு தெரிந்த பல ஆசிரியர்கள், நல்ல நிலையில் இருந்தவர்கள், மேல சொன்ன ஏதாவது ஒரு கேட்டகிரில இருந்தவங்க, இருக்கறவங்க, ஏன் நாமளே பல பேர் அப்படி தான், நாமளே கண்கூட பாத்துருப்போம் " அவருக்கு கார், பைக், வீடு, நிலம் எல்லாம் இருக்கு ஆனா எப்ப பாத்தாலும் கடன் இருக்குன்னு பொழம்புறார்". ஃப்ரெண்ட் நல்ல வேலைக்கு போய் நல்லா சம்பாரிக்குரான் ஆனா  முக்கால் வாசிEMI கே போகுதுங்கறான்.


சரி, இப்போ எப்படி மாச கடன்காரன் ல இருந்து தப்பிகறதுனு பாப்போம். தேவைக்கும் ஆடம்பரத்துக்கும் வித்தியாசம் உண்டு. கார் தேவையே இல்லாத போது, கார் ஆடம்பரம், தேவையே இல்லாத போது விருப்பப்படும் ஒவ்வொன்றும் ஆடம்பரம் தான். இப்போ தேவையே படாத போது வாங்கப்படும் கார் - விலை ரூ 10.00 லட்ச முன்னு வைப்போம், ஒரு 8 லட்சம் லோன் வாங்குறோம் 9.00 % இன்ட்ரஸ்ட், 10 வருஷம், அப்போ EMI வந்து ரூ 10,314 / -. மொத்த 10 வருஷத்துக்கு ரூ 4.16 லட்சம் இன்ட்ரஸ்ட் பே பண்னிறுப்போம் , மொத்தம் 12.16 லட்சம் + 2 லட்சம் = 14.16 லட்சம் . இப்போ கார் ரோட வேல்யூ 10 வருசம் = ரூ 5 லட்சம்,. சோ லாஸ் 14.16- 5 = 9. 16 லட்சம் . ஒரு நிமிஷம் இப்போ நாம கட்டுன பணத்துக் கான பண வீக்கத்தை ( Inflation) 4% கண்டிப்பா நாட்டோட குரோத் கு வேனும் நான் 6% எடுத்துகிறேன் இது நம்ம நாட்டு பண வீக்கத்தோட குறைவு . மேல சொன்ன 2 லட்சம் மொத்தம் + 1 .20 லட்சம் வருச EMI க்கு 10 வருடத்திற்கு பிறகான மதிப்பு கிட்டதட்ட 20.34 லட்சம் .


அப்போ 20.34 - 5 = 15.34 லட்சம் லாஸ் . " சரி அத எப்படி சரி செய்யறது, 4 சீட்டர் 10 லட்சம் வேல்யுக்கு பதில் 5 to 7 லட்சம் மதிப்புள்ள கார். 2 லட்சம் கை காசு 3 லட்சம் லோன். மீதி அமெளன்ட் நல்ல SlP. " .



3 லட்சதுக்கு EMI 3800, மீதி 7, 200 SIP 10 வருஷம் , loan 4.56 +2.06 மொத்தம் காருக்கு 6.56 லட்சம் . 10 வருசம் கார் வேல்யூ 2.50 சோ 6.56 - 2.50 = 4.06 லாஸ் . 7200 ரூ SIP 6%  CAGR 10 வருஷம் நெட் Value 11.88 லட்சம் .

கார் வேல்யூ பணவீக்கம் சுமார் 9.95 -2.50 (கார் வேல்யூ ) = 7.45 லட்சம் லாஸ் + SIP 11.88 = 4.43 லட்சம் பிராபிட் .


ok எனக்கு கார் தேவை இல்லை , 2 லட்சம் லட்சம் + 10000 மாத SIP , 10 வருஷம், 6% CAGR = 19.19 லட்சம் . இன் புலேசன் பாய்ண்ட்.

என்ன தல சுத்துதா , ஆமா இது ஒரு சவாலன சிக்கலான முடிவு தான். நாம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு உலகில், இன்வெஸ்ட் மெண்ட் அட்டடிங்கிறது சாமானியமான விக்ஷயமும் இல்ல.

" சவால்கள் தான் நம்முடைய சக்தியை நமக்கே புரிய வைக்கின்றன, சந்தர்பங்கள் மகுடங்களில் மணியாய் ஜொலிக்கின்றன" .

வீரனின் கத்தி எப்போதும் உறைகளில் உறங்குவது இல்லை - கத்தியை தீட்டுவோம்.

Saturday, 27 May 2017

20 ரூபாய் இன்வெஸ்ட்மண்ட் - 2, புதுசா ஏதாவது செய்வோம்



" மோதி விடாதே நண்பா, மொத்தமும் கடன் " - சிந்திக்க வைத்த ஒரு ஆட்டோவின் பின்பக்க வசனம்.
4 மாதத்திற்கு முன்பு இந்த பக்கத்தில் எழுதிய 20 ரூபாய் இன்வெஸ்ட்மென்ட் டீ கடையில் இருந்து இப்போ ஆட்டோ.
ஆனா ஒரு சின்ன மாற்றம் அது, நஷ்டத்தில் இருந்து லாபமா மாத்தனும்.  இன்னும் தெளிவா சின்னனதில் இருந்து பெரிசா ... 


அந்த சிறுமிக்கு பத்து வயசு இருக்கும் கஷ்டபட்டு அடம் பிடித்து மூனு ரூபாவை அப்பாவிடம் வாங்கியது. அதுக்கு கோசா பழம் ( water melon ) சாப்பிடிடனும்னு ரொம்ப நாள் ஆச, அப்பா குடுத்த அந்த ரூபாவ எடுத்துகிட்டு கடைகாரரிடம் ஓடி அண்ணா ஒரு பழம், அந்த கடைகாரர் அந்த பணத்தை பார்த்து " இதுக்கு எல்லாம் பழம் கொடுக்க முடியாது". அப்ப இதுக்கு என்ன தான் கிடைக்கும்." அங்க தெரியுது பார் பிஞ்சு அதுதான் கிடைக்கும் ". அந்த சிறுமி அந்த காச அந்த கடைகாரரிடம் குடுத்து அந்த பிஞ்ச நானே எடுத்துகிறேன் ஆனா 2 மாசதுக்கு அப்புறம். 




அந்த சிறுமி ஏதோ தெரியாம சொன்னதா தெரியலாம். ஆனா சின்ன  குழந்தைகளுக்கு உள்ள சாமர்த்தியம் நமக்கு ...... அது ஒரு பெரிய கேள்வி குறி. எங்க இருந்து இன்வெஸ்ட்மென்ட ஆரம்பிக்கறது, எப்படி ஆரம்பிக்கறது, அப்படிங்கறதே மிகப் பெரிய கேள்வி.

20 ரூபாய் இன்வெஸ்ட்மெண்ட், ஆர்டிகள் பிறகு பங்கு சந்தை வளர்ச்சி மாதம் புதிய உச்சம். எக்கசக்கமான உள்நாட்டு முதலீடுகள் 500 பில்லியன் நம்ம முடிகிறதா? எண்ணற்ற வெளிநாட்டு முதலீடுகள் . 



நம்ப முடியாத உண்மை என்னன்னா O. 967% முதலீட்டாலர்கள் மட்டுமே முழுமையாக முதலீடு செய்கின்றனர். புதிதாக எக்கசக்கமான SIP முதலீடுகள் . கன்னிசமான புதிய மியூச்சுவல் பண்ட்கள். ஒரு காலத்தில் இன்சுரன்ஸ் மக்களை சென்றடைந்தது போல பியூச்சுவல் பண்ட் சென்றடையும் என்பது வெகு தூரத்தில் இல்லை. 



எடிசன் தன்னுடைய நிறுவனத்திற்கு ஆள் எடுக்க நேர்கானல் நடத்தி மூன்று முதல் ஐந்து பேர் வரை தேர்வு செய்வார், பின் அவர்களை இரவு விருந்திற்கு அழைத்து செல்வார், எடிசன் சாப்பிட்டு உப்பு குறைவாக இருக்கிறது என்பார். அந்த தேர்ந்தெடுக்கபட்டவர்கள் உடனடியாக உப்பை போட்டுக் கொண்டால், அவ்வளவுதான் அவன் ரிஜக்ட்.



இப்படி நிறைய பேர் தனக்கு என்ன வேண்டும், தன்னுடைய தேவை என்ன, எது சரியான நேரம், எவ்வளவு காலம் , என எதுவும் தெரியாமல் இன்வெஸ்ட் மெண்ட் ஆரம்பிப்பது. அவர் சொன்னார் இந்த பண்ட் செம ரிட்டர்ன் தரும், இவரு சொன்னார் இந்த பண்டு டபுள் ரிட்டர்ன். எடுத்துக்காட்டாக மார்கெட் புதிய உச்சத்தில் இருக்கும் போது லார்ஜ் கேப் முதலீடுகள் வெறும் 3 மாதத்தில் பெரிய ரிட்டர்ன் தரும் என்பது ஒரு பெரிய கேள்வி குறியே....

SIP ன் மிகச் சிறிய மாத முதலீடு 500 ரூ அதாவது நாளொன்றுக்கு 20 ரூபாக்கு குறைவு . 500 ரூபாக்கு என்னால் HDFC யோ Eicher யோ அல்லது Maruthi Suzuki யோ வாங்க முடியாது ஆனால் அந்த சேர்களில் முதலீடு செய்த மியூச்சுவல் பன்ட்களில் முதலீடு செய்யலாம் . அதற்கு தேவை நாம் நன்றாக பண்ட்களை தேர்வு செய்வது மட்டுமே.

நான் எப்போது முதலீடுகளை தொடங்குவது?

ஒரு ஞானியிடம் ஒரு சீடர் கேட்டார்.
" ஒருவன் எப்போது சாப்பிட வேண்டும்?"

ஞானியின் பதில்
" இருப்பவன் பசிக்கும் போது "
" இல்லாதவன் இருக்கும் போது " 


- இன்வெஸ்ட்மெண்ட் வளரும்.....

Monday, 15 May 2017

அடுத்த தலைமுறை வங்கிகள். புதுசா ஏதாவது செய்வோம் - 2

Next generation BANKs.


கடந்த சனி அன்று கிராமத்தை சேர்ந்த ஒரு இளம் தொழில் முனைவோரை சந்திக்க நேர்ந்தது. அவர் தன்னுடைய தொழில் பற்றி கூறி விட்டு. " தம்பி நீ என்ன பன்னுற ?" னு என்னை பார்த்து கேட்க " அண்ணே , நான் பேங்ல வேல செய்யுறேன்" சொல்ல, அவரும் ரொம்ப குஷி ஆகி ஏகத்துக்கும் கேள்வி கேட்க, பதில் சொல்ல நேர்ந்தது. பின் சற்று இடைவெளி விட்டு . " தம்பி, இந்த ஏடிஎம், ஆன்லைன் டிரான்ஸ்பெர், மொபைல் பேங்கிங் இது எல்லாம் என்னோட நிறைய நேரத்த மிச்சப்படுத்துது. நல்ல வேளையா நான் 5 வருஷத்துக்கு முன்னாடி பேங்க்ல ஒரு மணி நேரம் முதல் நாள் முழுவதும் நின்ன காலம் போச்சு. ஆனா, இன்னும் மாறாதது - இந்த லோனுக்கு தான் அலைய வேண்டியிருக்கு, அதுக்கு ஏதாவது பண்ணுங்கப்பா ".


இது ஏதோ இவர் மட்டும் தான் சொல்றார்னு நினைச்சா பெரும்பாலும் இதே நிலைதான். இன்றைய நிலையில் அனைவரின் கேள்வியும் அது தான்.


ரீசார்ஜ் பண்ண கடைக்கு போன காலம் போய் உள்ளங்கையில் ரீசார்ஜ் செய்யுறோம், நகைக்கடைக்கு தங்கம் வாங்க சிறுக , சிறுக பணம் சேர்த்த காலம் போய் பணம் எப்போ நம்ம கிட்ட இருக்கோ ( 1 ரூ க்கு கூட) அப்ப தங்கம் வாங்குற நிலை வரை வளர்ந்த இன்றைய உலகில் இன்னும் கடன் கொடுக்க ஒரே நிலைமை தான்... இதுக்கான மாற்று தேட வேண்டிய கட்டாய நிலைமையில் நாம். எப்படி என்று ஒரு பெரிய கேள்வி குறியோடு, மிக பிரம்மாண்டமான ஆச்சரீயத்தை நோக்கி நகர்வோம்.

ரோபாட் & ஆட்டோமேஷன்,

Nasscom ன் நேற்றைய அறிக்கை படி IT ன் ஆட்டோமேஷன் ஆல் 30% வேலை இழப்பு ஏற்படும் அதாவது 30% பேரின் வேலைகளை ஆட்டோமேஷன் மூலமாக அதிக செலவில்லாமல் செய்ய முடியும். ஏற்கனவே ஆட்டோ மொபைல், பார்மா போன்ற துறைகளின் மாற்றம் . மற்ற துறைகளையும் தூண்டியது என்று சொல்லலாம்.

நிதி சார்ந்த நிறுவனங்களில் இது சாத்தியமா?

ரோபாட் என்றால் மனித உருவில் உள்ள ஒன்று என்று எண்ணினால், உங்கள் எண்ணம் தவறு. அது ஒரு நிரல் ( Program). உங்களுக்கு எது வேண்டுமோ அதை தறுவது. அதாவது
அமேசான், பிளிப் கார்ட், பேடி எம் ல் ஏதாவது ஒன்றை தேடுவோம் பிறகு அப்படியே விட்டு விடுவோம் அல்லது மறந்து விடுவோம். ஆனால் அந்த நிரல் உங்களுக்கு அவ்வப்போது நினைவு கூறும் அல்லது அது சார்ந்தவர்றையே பின்னஞ்சல் செய்யும். நிதி சார்ந்த துறைகளின்  வளர்ச்ச்யில் ஒரு முக்கிய பங்கு இதற்கும் உண்டு. பாலிஸி பஜார், பண்டஸ் இந்தியா போன்றவை அப்படி வந்தவை. இவைகள் காப்பீடு மற்றும் மியூச்சுவல் பண்ட் களை ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்குகிறது. மிக குறைந்த அளவிலான உயர் மட்ட நிர்வாக குழு மட்டுமே போதுமானது. ஆங்கிலம் தெரிந்த 100க்கும் குறைவான ஊழியர்கள், மற்றும் BP0 பணியாளர்கள், லாப மடங்கு அதிகம்.

வங்கிகளில் எப்படி சாத்தியம்?
ஒரு வங்கியின் ஆப்(APP) கிட்டதட்ட அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய தாய், DTH, Post paid bill, EB போன்ற மாதந்திரம் பணம் செலுத்த நாம் உபயோகிக்கும் போது அது அதனை பதிவு செய்து அடுத்த மாதம் நினைவூட்டுவது, ஏதேனும் கடன், டெபாசிட் மற்றும் இதர திட்டங்கள் பற்றி இனையத்தில் தேடும் போது அந்த பதிந்து ஒப்பிட்டு காட்டுவது. இது ஒரு சாதாரண முறை

வாய்ஸ் ரெககனைசேஷன்.

" டிரான்ஸ்பர் மணி டீ தீபக் " என்றதும் வாய்ஸை பாஸ்வேடாக கொண்டு புரான்ஸ்பெர் செய்வது. RD, FD, Loan ஓபன் மற்றும் குலோஸ் செய்வது. வங்கி, ஃஆபர் மற்றும் ATM இருப்பிடம் காட்டுதல்.

பயோ மெட்ரிக், ரெட்டினா ஸ்கேனிங்,

இது கடன் கொடுப்பதற்கான மிக துல்லியமான ஒரு முறை .
அதாவது இன்று அனைவரிடமும் ஆதார் அட்டை உள்ளது. எப்படியும் ஏதாவது ஒரு Proof ஏதாவது ஒரு வங்கியுடன் இனைக்கப் பட்டிறுக்கும். மேலும் வருமான வரி துறை அல்லது EPF,NPS மூலம்  வேலை செய்யும் நிறுவனங்கள் இணைக்கப்படலாம்.கடன் வேண்டுவோர் தங்கள் கைரேகை மற்றும் ரெட்டினா ஸ்கேன் செய்து ஆதாருடன் இனைக்கப்படலாம். இதனால் கடன் வாங்கி ஏமாற்ற நினைப்பவர்கள் எண்ணிக்கை குறையும். பர்சனல் லோன் வேண்டுவோர் தங்கள் மொபைல் மூலமாக எங்கிருந்தும் பெற முடியும். 

GST மூலம் நிறுவனங்கள் மையப்படுத்தப்படும் அதனால் நிறுவனங்களின் வெளிபடை மற்றும் நம்பக தன்மை எளிதில் அறியப்படும். இதுவும் மையப்படுத்தி அரசின் மூலம் வங்கிகளுக்கு வழங்கப்படலாம், இதனால் நிறுவனங்களின் வரா கடன் நிலை மாறலாம்.

மேற்கண்ட செயல்பாட்டிற்கு வங்கியை நோக்கி மக்கள் வர தேவை இல்லை. அடமானம் மற்றும் இதர செயல்பாடுகளும் டிஜிட்டல் மையம் ஆகும் பட்சத்தில் வங்கி கிளைகளே நோக்கி நகருவது குறையும். இதனால் வங்கிகளின் செலவினம், வரா கடன் விகிதம், புரவீசன் குறையும்.
மக்கள் அதிகம் வராத பட்சத்தில் கிளை களுக்கு குறைந்த அளவு பணியாளர்களே போதும். அதற்கான செலவும் குறையும்.

தங்க நகை கடன் மற்றும் லாக்கர் .

இதற்காக மட்டும் வங்கிகளை அணுக வேண்டிய தேவை ஏற்படலாம். தங்க நகை களின் பியூரிட்டி யை அளவிடும் இயந்திரம் இன்றைய சந்தையில் கிடைக்கிறது. ஆனால் அது இன்னும் முழுமை படுத்தப்படும் பட்சத்தில் அதற்காக தனியாக ஒரு நபர் தேவை படாது. 

லாக்கர் கூட பயோ மெட்ரிக் முறையாகலாம்.

காசோலை ( Cheque), DD

இன்றைய நிலையில் DD க்கான தேவை குறைந்துள்ளது, இது வரும் காலங்களில் இல்லாமலும் போகலாம்.
காசோலை முறை டிஜிட்டல் செய்யப்படலாம். அதாவது அனுப்புபவர் - பெறுபவர், வங்கி App களில் பிரத்தியோகமாக Cheque Send & Receive இருக்கும் அனுப்புபவர் வருங்கால தேதி குறிப்பிட்டு, தொகையை டைப் செய்து அனுப்புவார் அதை பெறுபவர் பெற்றவுடன் அந்த தேதி வந்த உடன் ஒரு நினை ஊட்டல் அனுப்பி பின் கலெக்சன் ஆன் லைனிலேயே போடப்படும். இதனால் நிறைய நேரமும், வீண் விரயமும் தடுக்கப்படும்.

அடுத்த தலைமுறையில் வங்கியானது உள்ளங்கையில்.

2030 க்கு பிறகான ஒரு வங்கி சேவையானது.
வீடு டூ பேங்க் வரை வாய்ஸ் ரெக்.
" சென்ட் 10000 டூ அப்பா" - " சக்ஸஸ்".
" பே செக் வொர்த் 10000 on 20 | 12 | 2030 டூ சதிஸ்" - " செக் சென்ட் சக்சஸ் புல்லி ".
"வே டூ கனரா பேங்க்" - " கோ லெப்ட் பார் 10 mins ".
பேங்க்ல் தங்க நகை வைக்க

தங்க நகையை அந்த மெசினில் வைக்க அது அளவை மற்றொரு மெசினிற்கு உள்ளீடு அனுப்ப அது தொகையை தெரிவு செய்து காட்ட, அவர் தனது கை ரேகை மூலம் கோல்டு லோன்.

திடீர் தேவைக்கு பர்சனல் லோன் வாங்க - வாய்ஸ் ரெக்.
" ஓப்பன் பர்சனல் லோன்" - "யூ ஆர் எலிஜிபில் ஃபார் 500000 அன்ட் ரேட் ஆஃப் இன்டநெஸ்ட் 10.50%, வில் யூ கன்டினியு", " லெஸ்", " அமளன்ட் & மந்த் " , " ஒன் லேக், 10 மந்த் " - " அக்கௌன்ட் ஓபன்ட் அன்ட் அமெளண்ட் கிரெடிட் சக்சஸ்ஃபுல்லி ".


வரும் காலங்களில் வங்கி சேவை வெறும் நொடிகளில் நிறைவேற கூடிய தாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
புதுமை - வளரும்.

Sunday, 14 May 2017

புதுசா எதாவது செய்வோம் - 1

  ஐடியல் டூ இன்னோவேசன்

1968 வாயில ஈ போறது கூட தெரியாம ரெஃப்ரி அதிசயமா பாத்து பிரம்மிச்சி நிக்க வைச்ச அந்த சம்பவம்.
அதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனை அது மெக்ஸிகோ ஓலிம்பிக் உயரம் தாண்டுதல் ( high Jump) பிரிவு. அதுவரை நேராக வேகமாக ஓடி வந்து ஒரு காலை நன்கு ஊன்றி அந்த உயரம் தாண்டப்பட்டது. அடுத்து வந்த டிக் பூஸ் பெரி (Dick fousbary) USA, அரை வட்ட வடிவில் ஓடி வந்து இரண்டு கால்களையும் நன்கு ஊன்றி உடம்பை திருப்பி முதுகுபுறமாக 2.28 மீ தாண்டி பிரமிப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு அதுவே இன்று வரை தொடர்கிறது . அந்த தாவலுக்கான பேரே அதன் பிறகு பூஸ்பெர்ரி ஃபிளாப் ( fousbary flop) என்றானது. புதுமையாக செய்தது மட்டும் அல்லாமல் அதற்கு முயன்று வெற்றி பெறுவது இன்னோவேசன் டூ சக்ஸஸ்.


ஆனால், அடுத்து ஒலிம்பிக்கில் அவர் தகுதி கூட பெறவில்லை. புதுமை புகுத்திய பிறகு அதனை தக்க வைப்பது கடினம்.  புதுமை எப்போதும் பிறறால் காப்பி அடிக்கப்படும். இது இன்வெஸ்ட்மண்ட் கும் பொறுந்தும்.

புதுமையை புகுத்துவது தலைமையின் பணி அதை செயல்படுத்தி வெற்றி காண்பதே நிறுவனங்களின் பணி.

அனைவருக்கும் தெரிந்த ஆகச் சிறந்த கம்பெனிகளில் முதலீடு செய்வதே சிறந்ததாக பட்டது. அது பணம் அதிகம் கொண்டவருக்கே சாத்தியப்பட்டது. பெஞ்சமின் கிராஹம் வேல்யு இன்வெஸ்ட்மெண்ட் க்கு பிறகு வெறும் 5000 $ ல் இருந்து உலகின் 2வது மிகப் பெரிய பணக்காரரான வாரன் ஃபபெட் - சேர் மார்க்கெட் முதலீடு மூலமும் பணம் பன்ன முடியும், என்று முதலீட்டின் புதிய வழியை கண்டார். 

ஐ போன் இல்லாதவரிடம் Apple கன்பெனின் கன்சிசமான பங்குகள், பயணம் செய்ய பிடிக்காதவரிடம் USA ன் சிறந்த விமான துறை முதலீடுகள். பாக் ஹையர் கேத் வே மூலம் 

என்னற்ற முதலீடுகள் – இதெல்லாம் பெஞ்சமின் கிராஹிம் வேல்யூ இன்வெஸ்ட்மெண்ட் பிறகு ஃபபெட் ன் மாற்றம்.


வால் மார்ட் ன் மிகப் பெரிய சாம்ராஜ்யம் முன், ஏன் வாடிக்கையாளர்கள் தனக்கு வேண்டியதை தேடிச் சென்று வாங்க வேண்டும் நாம் ஏன் அவர்களை தேடிச் சென்று கொடுக்க கூடாது? உருவானது அமேசான்.

US க் மட்டும் தான் சாத்தியமா நமக்கு? உருவானது பிளிப் கார்ட். இன்று அது மின்ரா, ஜபாங் ஐ கையகபடுத்தி ஸ்னாப் டீல் ஐ பேரம் பேசுகிறது.

சூப்பர் மார்கெட் இதுல ஏதாவது புதுமை? நாம கவனிச்சமோ இல்லையோ விலை குறைவான பொருள்கள் கீழ் ரேக்கிலேயும் அதிகமான பொருள்கள் மேல் ரேக்கிலேயும் மற்றவை நடுவிலும் அடுக்கப்படும். மிகப் பெரிய பிரான்ட்கள் எப்போதும் கண்ணில் படும்படி பார்த்துக் கொள்ளப் படும். சாக்லேட் போன்ற திண்பன்டங்கள், பொதுவாக குழந்தைகள் விரும்பக்கூடிய பொருள்கள் பில் போடும் இடம் அருகில் இருக்குமாறு வைக்கப்படும். மிகப் பெரிய மால்களில் உணவகம் மேல் தளத்திலோ அல்லது கடையின் ஊடே செல்லும் படியே இருக்கும் இது நிகல்கால மாற்றம் .

TVS 50, M80,TVS XL கள் பெண்களுக்கு அசௌகரியமாக பட, ஸ்கூட்டிகள் புதுமையின் அடையாளம் - இன்று 2 வீலர் விற்பனையில் முதல் இடம் இந்த ஸ்கூட்டி களுக்கே.

பொதிகை மட்டும் பார்த்தவர்களுக்கு சன் டிவி, சினிமா டூ சீரியல் டூ ரியாலிட்டி சோ. புதுமையின் இடையீடு.

ஆர்குட் - பழைய தலைமுறை பேஸ்புக் கூகுள் புதுமையை மெறுேகேற்ற தவறியது அதன் இடத்தை பேஸ் புக் ஆக்கரமித்தது ,மெஸேஜ் செய்ய பணம் கொடுத்த காலம் போய் வாட்ஸ் ஆப் உலகம் வரை. வாட்ஸ் அப் புதுமை ஏற்படுத்திய தாக்கம் அதனை பேஸ்புக் கையகபடுத்தியது.

இன்டர்நெட் சென்டர் டூ ஜீயோ,விசிறி டூ பேன், பானை டூ பிரிட்ஜ், விறகு அடுப்பு டூ கேஸ். மாட்டு வண்டி டூ ஏர் பஸ். விளக்கு டூ எல் இடி லைட். டெலிகிராம் டூ  ஸ்மார்ட் ஃபோன். புதுமையின் பாடைப்புகள்.
இரு சக்கர வாகனங்கள் மட்டுமே இருந்த காலங்களில் டொயோட்டா, ஃபோர்ட் டின் பிரமிப்பு . பெட்ரோல் , டீசல் கார்களின் மத்தியில் டெஸ்லா வின் புதுமை.
சீகைக்காய் மற்றும் சேம்பூ சேர்ந்த வித்தியாச கலவை சீகைக்காய் சேம்பூ. பாக்கெட் ஊறுகாய், அமுல் பால் முதல் அமுல் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் - புதுமையின் வித்தியாசம்.
இது மட்டும் அல்ல. இன்னும் எத்தனையோ உங்களை சுற்றிலும் பல முகங்களில் .

என்னதான் மெனு கார்ட் இருந்தாளும் அதை நாம அர மணி நேரம் புரட்டி பார்த்து, எப்பா .... புதுசா என்ன இருக்குனு சர்வர்கிட்ட கேட்டு அவரும் அதே புளித்து போன மெனுவ சொல்ல சரி ஒரு ரோஸ்ட் னு சொல்ற நாமதான், TV சோ ரூம் போய் புது மாடல் ஏதாவது காட்டுங்க னு சொல்லி ஒரு பேசிக் மாடல் பேக் பன்னுறோம். நம்ம பையன் ஏதாவது புதுசா செய்யனும்னு சின்ன வயசுல சொன்ன அப்பா, அந்த பையன் ஏதாவது செய்ற அப்போ, ஏன்டா வேண்டாத வேல னு சொல்லுற அப்பா முதல், டேய் ஏதாவது புதுசா பன்னுடா னு பையன் கிட்ட சொன்ன அடுத்த நிமிடம், வாடா பிராஜெக்ட் சென்டர் போலாம்னு சொல்லுற காலேஜ் ஃபிரண்ட் வரை .

ஃபிரண்ட் ஒருத்தன் டேய் படத்துக்கு போலாம் வாடா னு கம்பல் பன்னி முதல் நாள் முதல் சோ அடிச்சு பிடிச்சு போய். பெரிய ஆரவாரத்துக்கு நடுவுல கஷ்ட்டப்பட்டு படத்த பார்த்து வெளிய வந்தா, என்னடா படம் புதுசா எதுவுமே இல்ல..........
புதுமை - வளரும்.